16 25
இலங்கைசெய்திகள்

பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

Share

பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிபதி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், தற்போதைக்கு வேட்பாளர் விண்ணப்பப் படிவம், வேட்பு மனுக்கள் உள்ளிட்ட படிவங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச்சிடும் பணிகளுக்கான செலவுத் தொகை இதுவரை உத்தேச மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒருவார காலத்துக்கு முன்னதாக அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டு, உத்தியோகபூர்வ வாக்கு அறிவித்தல் பத்திரங்கள் உள்ளிட்ட இன்னும் சில படிவங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கப்படும் என்றும் கங்கா லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...