16 25
இலங்கைசெய்திகள்

பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

Share

பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிபதி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், தற்போதைக்கு வேட்பாளர் விண்ணப்பப் படிவம், வேட்பு மனுக்கள் உள்ளிட்ட படிவங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச்சிடும் பணிகளுக்கான செலவுத் தொகை இதுவரை உத்தேச மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒருவார காலத்துக்கு முன்னதாக அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டு, உத்தியோகபூர்வ வாக்கு அறிவித்தல் பத்திரங்கள் உள்ளிட்ட இன்னும் சில படிவங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கப்படும் என்றும் கங்கா லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...