பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட துசித ஹல்லொலுவ

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 2

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20.06.2025) காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவருக்கு பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசாங்க சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version