24 669b11ccc0213
இலங்கைசெய்திகள்

இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Share

இளைஞர் எடுத்த விபரீத முடிவு

பதுளை – கொழும்பு தொடருந்து பாதையில் உறங்கி இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தம்பிட்டி, ரம்புக்கன, எலுகல்ல கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய திருமணமாகாத இளைஞனே கடந்த (17) திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாயார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தனது பாட்டியின் மரணத்திற்குப் பிறகு சலூன் ஒன்றை ஆரம்பித்து, தனது அத்தையின் பராமரிப்பில் குறித்த இளைஞன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்போது பதுளை பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த யுவதி உறவை நிறுத்தியதால் மனமுடைந்து பதுளை – கொழும்பு தொடருந்து பாதையில் படுத்து உறங்கி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின்தொடருந்தின் சாரதி திடீர் மரண விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நேற்று (19) கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எம்.ஆர்.பி. குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர், சடலத்தை பொலிஸார் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று (20) பத்தம்பிட்டியவில் இடம்பெறவுள்ளன.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...