இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் தகவல்

Share
24 664ff18756ec8
Share

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் தகவல்

மாரவில மற்றும் மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மரங்கள் உடைந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தன்டிய ஹவான வீதியில் பிலகட்டுமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது பலா மரம் விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹவெவ மெதகொட பிரதேசத்தில் வசித்து வந்த ஹஷினி இஷார லங்கா என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நாத்தாண்டிய நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

இதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளியாப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரும் மழையில் இருந்து தப்பிப்பதற்காக வீதிக்கு அருகாமையில் உள்ள மரத்தின் அடியில் இருந்த போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

சூரியதென்ன, கல்முருவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி என்ற 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலத்த காயமடைந்த பெண் மாதம்பே கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்துக்குள்ளானது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...