3 12
இலங்கைசெய்திகள்

மனிதர்களுக்கு ஏற்படப்போகும் கொடிய ஆபத்து.. உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு

Share

2088ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் எனவும் அந்த வைரஸ் காரணமாக மனிதர்கள் விரைவாக வயதானவர்களான தோற்றத்திற்கு மாறி விடுவார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்துள்ளார், அவை நிறைவேறியும் இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது அவர் கணித்திருந்த ஒரு வைரஸ் நோய்த்தாக்கம் பற்றிய கணிப்பு சமூக ஊடகங்களில் மிக பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

அடுத்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்படக் கூடிய இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவர்கள் என பாபா வங்காவின் கணிப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்த வைரஸ் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம், ஆனால் இன்றைய மாறிவரும் காலநிலை, உயிரியல் போர் மற்றும் ஆய்வகங்களில் வைரஸ்கள் உருவாக்கப்படும் சூழலில் இது மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

பாபா வங்காவின் முழுப் பெயர் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்பதாகும், அவர் 1911இல் பிறந்துள்ளார்.

அவர் மேற்குலகின் பால்கன் நோஸ்ட்ராடாமஸ் என்றும் கருதப்படுகிறார். பாபா வங்கா குழந்தை பருவத்தில் ஒரு விபத்தில் தனது பார்வையை இழந்ததாகவும், அதன் பிறகு எதிர்காலத்தைப் பார்க்கும் திறனைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பாபா வங்காவின் பல கணிப்புகள் பெருமளவில் உண்மையாகியுள்ளதாகவும் அவரின் கணிப்புகளில் 9/11 தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, பராக் ஒபாமா ஜனாதிபதியானமை மற்றும் இந்திரா காந்தியின் படுகொலை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...