7 28
இலங்கைசெய்திகள்

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

Share

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்று நோய், தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோய், பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.

இது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உடலில் ஏற்படும் காயங்களுடன் நேரடியாக பரவும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை போன்ற பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...