7 28
இலங்கைசெய்திகள்

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

Share

குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்று நோய், தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோய், பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.

இது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உடலில் ஏற்படும் காயங்களுடன் நேரடியாக பரவும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை போன்ற பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...