rtjy 275 scaled
இலங்கைசெய்திகள்

அவிசாவளை இரட்டைப்படுகொலை: நால்வர் கைது

Share

அவிசாவளை இரட்டைப்படுகொலை: நால்வர் கைது

அவிசாவளையில் ஓட்டோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்குத் தகவல் வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஓட்டோ மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கியமை, உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இரவு, கேகாலை பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு ஓட்டோவில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...