30 1
இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை

Share

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை

போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபை ஒன்றை நிறுவுவதற்கான சட்டங்களை விரைவில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அடுத்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்ததை உறுதிசெய்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம், இந்த உத்தேச அதிகார சபைக்கு இருக்கும் என அமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரசபை எடுக்கும் முடிவுகளை சவால் செய்ய சட்ட விதிகள் இந்த சட்டத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கைப்பற்ற பொலிஸார் அண்மைக்காலமாக எடுத்த முயற்சிகளை அடுத்து இந்த புதிய யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான பொறிமுறை இலங்கையில் இல்லை.

எனவே புதிய சட்டம், இந்தக் குறைபாடுகளை போக்குவதற்கு உதவும் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...