இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை

Share
30 1
Share

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை

போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபை ஒன்றை நிறுவுவதற்கான சட்டங்களை விரைவில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அடுத்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்ததை உறுதிசெய்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம், இந்த உத்தேச அதிகார சபைக்கு இருக்கும் என அமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரசபை எடுக்கும் முடிவுகளை சவால் செய்ய சட்ட விதிகள் இந்த சட்டத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கைப்பற்ற பொலிஸார் அண்மைக்காலமாக எடுத்த முயற்சிகளை அடுத்து இந்த புதிய யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான பொறிமுறை இலங்கையில் இல்லை.

எனவே புதிய சட்டம், இந்தக் குறைபாடுகளை போக்குவதற்கு உதவும் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...