24 66b76cab995f4
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

Share

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக கல்விக்காக செல்லும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 40 வீதமாக மட்டுப்படுத்தப்படும் என்ற தகவலை கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் நிராகரித்துள்ளார்.

சமகால தொழிற்கட்சி அரசாங்கம் அவ்வாறான கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எதிர்காலத்தில் உயர்கல்வியின் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-2023ஆம் நிதியாண்டில் 528,000 ஆக இருந்த அவுஸ்திரேலியாவின் மொத்த குடியேற்றத்தின் எண்ணிக்கை 2024-2025 ஆம் ஆண்டில் 260,000 ஆக குறைக்கப்படும் என்று கடந்த மாதம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதற்கமைய, உயர்கல்விக்கு வரும் மாணவர்களுக்கு மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துதல், வங்கி இருப்பு தொகையை உயர்த்துதல், ஆங்கில மொழித் திறனை அதிக அளவில் பேணுதல் போன்ற பல கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

எனினும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் வலியுறுத்துகிறார்.

அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு வருமானத்தில் உயர்கல்வி நான்காவது இடத்தில் உள்ளதால், இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – பெலாரஸ் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமைச்சர் விஜித ஹேரத் மின்ஸ்க் பயணம்

பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...