rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

Share

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

வர்த்தகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கம விதுரவின் உதவியாளர்கள் என தற்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வர்த்தகரை கொலை செய்வதற்காக அவரது வர்த்தக இடத்திற்கு அருகில் வந்திருந்த போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்று கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் அங்கு சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MNR NANATTAN ISSUE 3
செய்திகள்இலங்கை

ஆஸ்திரேலிய முதலீட்டாளரை மோசடி செய்த விவகாரம்: மன்னாரில் இருவர் கைது, விளக்கமறியலில்!

மன்னார் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவருக்குச் சொந்தமான சுமார் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை...

25 68fc25278cbb0
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் தொலைபேசியில் என் பெயர் எவ்வாறு சேவ் செய்யப்பட்டுள்ளது? – நாமல் ராஜபக்ச நகைச்சுவைப் பதில்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் தனது பெயர் எவ்வாறு...

25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....