rtjy 19 scaled
இலங்கைசெய்திகள்

அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

Share

அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் ஒருவர் கெக்கிராவையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து பேருந்தை மறித்து தாக்கிய இருவர் நடத்துனரிடம் இருந்த பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தையும் சேதப்படுத்தியதாக கெக்கிராவ பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டபோது சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது கெக்கிராவ பொது மைதானத்துக்கு அருகில் வந்த இருவர், பேருந்தை மறித்து நடத்துனரை தாக்கி, அவரிடமிருந்த பயணச்சீட்டு இயந்திரத்தை சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தாக்குதலுக்குள்ளான நடத்துனர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...