9 15
இலங்கைசெய்திகள்

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!

Share

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!

யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் (Kopay) பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் கோப்பாய் சந்தி அருகில் பயணித்த போது இன்று (10.11.2024) காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

இத் தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாரும் எதிராளிகளின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலுக்கு உள்ளாகிய ஊடகவியலாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...