9 15
இலங்கைசெய்திகள்

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!

Share

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!

யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் (Kopay) பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் கோப்பாய் சந்தி அருகில் பயணித்த போது இன்று (10.11.2024) காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

இத் தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாரும் எதிராளிகளின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலுக்கு உள்ளாகிய ஊடகவியலாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...