25 684578d12b30a Recovered 7
இலங்கைசெய்திகள்

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ

Share

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது பயணத்தை தொடங்கியவர் அட்லீ.

நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக இருந்துள்ளார். அதன்பின் தனது முதல் முயற்சியாலேயே முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற காதல் திரைப்படம் இயக்கினார்.

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ | Atlee 5 Movies Bo Details

அப்போது ஆரம்பித்த பயணம் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை வைத்து படங்கள் இயக்கி இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன்-தீபிகா படுகோனேவை வைத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒரு படம் இயக்குகிறார்.

படம் குறித்து வரும் ஒவ்வொரு தகவல்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் ரூ. 50 கோடி வசூல் வேட்டை செய்திருந்தது.

தளபதி விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து அவர் இயக்கிய படம் தெறி. கடந்த 2016ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

தெறி பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்தவர் மெர்சல் படத்தை இயக்கினார். விஜய் 3 வேடங்களில் நடிக்க கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 240 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

தெறி, மெர்சல் படம் கொடுத்த வெற்றி 3வது முறையாக பிகில் படம் மூலம் விஜய்யுடன் இணைந்தார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 305 கோடி வரை வசூலை குவித்து சாதனை படைத்தது.

4 படங்கள் செம ஹிட்டடிக்க பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு அட்லீ மீது பார்வை பட இருவரும் இணைந்து ஜவான் என்ற படத்தை கொடுத்தார்கள். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 1117.39 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரும் சாதனை படைத்தது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...