vaalveddu
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாவற்குளியில் வாள்வெட்டுக் கும்பல் அட்டாகசம்

Share

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப் பகுதியில் இரு குழுக்குகளுக்கு இடையில் இடம் பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் தொடர்ச்சியாக முரண்பாடு நீடித்து வந்த நிலையிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு ஒரு குழுவைச் சேர்ந்தவரின் வீடு மற்றைய குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன, ஒருவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான மற்றைய குழுவினர் இரவு 11.00 மணியளவில் மற்றைய குழுவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டினை சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவங்களால் குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வருவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட நிலையில், இன்று காலை (24) சம்பவம இடத்திற்கு விரைந்த பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...