32 1
இலங்கைசெய்திகள்

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு

Share

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) – பாடசாலையொன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசிரியையான 49 வயதுடைய கலைவாணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியைக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு எப்போதும் முதல் ஆளாக வந்துவிடும் அவர், பிள்ளைகளை வழி நடத்தி வருவதுடன், பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் என்றும் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர் எனவும் பாடசாலை சமூகம் அவரை நினைவு கூர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...