rtjy 183 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை

Share

மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை

அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டிலுள்ள, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோரை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமது கிராமங்களில் அஸ்வெசும திட்டம் தொடர்பில் பெரிதும் பேசப்பட்டது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த சமுர்த்தியை குறைந்தது ஒரு வருடமாவது நீடிக்கச் செய்தாலே இது சாத்தியமாகும் என நாங்கள் நினைக்கின்றோம்.

உடனடியாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் மக்களுக்கு நியாயம் கிடைக்காது. அதேசமயம், அஸ்வெசும திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கவுள்ள பயனும் கிடைக்காமல் போகும்.

அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைவது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை மாவட்டத்தை தெற்காசியாவில் சிறந்த பொருளாதார வலயமாக மாறியிருக்கும். துரதிஷ்டவசமாக அதனை செய்ய முடியாமல் போனது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...