rtjy 183 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை

Share

மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை

அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டிலுள்ள, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோரை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமது கிராமங்களில் அஸ்வெசும திட்டம் தொடர்பில் பெரிதும் பேசப்பட்டது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த சமுர்த்தியை குறைந்தது ஒரு வருடமாவது நீடிக்கச் செய்தாலே இது சாத்தியமாகும் என நாங்கள் நினைக்கின்றோம்.

உடனடியாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் மக்களுக்கு நியாயம் கிடைக்காது. அதேசமயம், அஸ்வெசும திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கவுள்ள பயனும் கிடைக்காமல் போகும்.

அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைவது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை மாவட்டத்தை தெற்காசியாவில் சிறந்த பொருளாதார வலயமாக மாறியிருக்கும். துரதிஷ்டவசமாக அதனை செய்ய முடியாமல் போனது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...