1 24
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டம்: தேசிய அடையாள அட்டையில் சிக்கல்

Share

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டம்: தேசிய அடையாள அட்டையில் சிக்கல்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதற்கட்ட நிவாரணங்களை பெறத் தகுதியுடைய 18 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளில் இரண்டு இலட்சம் பேர் இதுவரை வங்கிக் கணக்கை திறக்காததுடன் தேசிய அடையாள அட்டையிலும் பிரச்சினை உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அஸ்வெசும இரண்டாம் கட்ட விசாரணையின் கீழ் புதிதாக விண்ணப்பித்தவர்களின் தகவல், சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

முதற்கட்டப் பயனாளிகளில் 135,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை எனவும், எஞ்சிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் இருப்பதும், அதிகாரிகள் சரியான தகவல்களை தெரிவிக்காமையினாலும், வங்கிக் கணக்குகளில் சிக்கல் உள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சில பயனாளிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை சரிபார்த்த போது அதே இலக்கத்தில் மேலும் ஒருவர் இருப்பதன் காரணமாக நிவாரணங்களை வழங்க முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் பயனைப் பெற்றுப் பெற்றுக் கொள்வதற்காக 4 இலட்சத்து 55 697 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை மீளாய்வு செய்யும் பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...