4 25
இலங்கைசெய்திகள்

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

Share

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அஸ்வெசும கொடுப்பனவு வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பெஃப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

21ஆம் திகதிக்குப் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவு பெற வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு அந்தச் செய்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது வாக்காளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் மக்களின் பணத்தில் குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும், வேட்பாளர்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பல்வேறு விடயங்கள் வழங்கப்படுவதாக கூறி ஒருவர் வாக்குகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...