4 25
இலங்கைசெய்திகள்

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

Share

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அஸ்வெசும கொடுப்பனவு வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பெஃப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

21ஆம் திகதிக்குப் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவு பெற வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு அந்தச் செய்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது வாக்காளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் மக்களின் பணத்தில் குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும், வேட்பாளர்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பல்வேறு விடயங்கள் வழங்கப்படுவதாக கூறி ஒருவர் வாக்குகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...