MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

Share

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 நவம்பர் மாதம் 29-ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைப் பராமரித்துக் கொண்டிருந்த கிராம அலுவலர் மீது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 16-ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனால் இன்றைய தினம் அவரை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இருப்பதால், அதில் கலந்துகொள்வதற்காக இளங்குமரன் நேற்றைய தினமே (19) நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றைத் தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பாதிக்கப்பட்ட கிராம அலுவலர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் முன்னிலையாகியிருந்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8-ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...