24 66a48b75a05f8
இலங்கைசெய்திகள்

அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற கிழக்கு ஆளுநர்

Share

அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்றார்.

ஜனாதிபதித் தேர்தல் (Presidential Election) திகதி நேற்று (26) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) கிழக்கு ஆளுநர் ஆசி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நிலவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றியும் சகல சமூகங்களுக்கிடையிலும் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேரருக்கு விளக்கமளித்தார்.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து மகாநாயக்க தேரருக்கு எடுத்துரைத்தார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அஸ்கிரிய பீடத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை மகாநாயக்க தேரர் இதன் போது நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...

world 59
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தீவு முழுவதும் 2,000 அதிகாரிகள் களத்தில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...