9 35
இலங்கைசெய்திகள்

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

Share

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.

புலனாய்வுப் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் அமெரிக்க தூதரகம் தமது பிரிவுகளுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகங்கள் சந்தேகம் கொண்டால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பு அலட்சிப்படுத்தப்பட்டுள்ளமை ஆரோக்கியமானதல்ல. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட்ட தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக வெளிப்பட்டது. ஆகவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 9 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிபில – பதுளை வீதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகள் மற்றும் லொறி மோதி 20 பேர் காயம்!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) இடம்பெற்ற பாரிய விபத்தில்...

images 8 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எச்சரிக்கை: இலங்கையில் இளைஞர்களின் குற்றச் செயல்கள் 200% அதிகரிப்பு! சிறைச்சாலைகள் நிரம்பும் அபாயம்.

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள்...

hemasiri pujitha 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம்...

MediaFile 11 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: உள்ளூர் முகவர் நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்து பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ (X-Press...