9 35
இலங்கைசெய்திகள்

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

Share

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.

புலனாய்வுப் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் அமெரிக்க தூதரகம் தமது பிரிவுகளுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகங்கள் சந்தேகம் கொண்டால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பு அலட்சிப்படுத்தப்பட்டுள்ளமை ஆரோக்கியமானதல்ல. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட்ட தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக வெளிப்பட்டது. ஆகவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...