9 35
இலங்கைசெய்திகள்

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

Share

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.

புலனாய்வுப் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் அமெரிக்க தூதரகம் தமது பிரிவுகளுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகங்கள் சந்தேகம் கொண்டால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பு அலட்சிப்படுத்தப்பட்டுள்ளமை ஆரோக்கியமானதல்ல. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட்ட தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக வெளிப்பட்டது. ஆகவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...