tamilni 501 scaled
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

Share

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (30.01.2024) கடுவெல நீதவான் நீதிமன்றில் மூவரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்று ஒரு வருடத்திற்கு பின் இது தொடர்பான முறைப்பாடு பொலிஸில் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான நீதவான் உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...