5 32
இலங்கைசெய்திகள்

இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களை உடன் மீளப்பெற நடவடிக்கை

Share

இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களை உடன் மீளப்பெற நடவடிக்கை

மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களையும் தங்கள் கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்வாக நோக்கங்களுக்காகவும் வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கு கடவுச்சீட்டுக்களை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

பல இராணுவ வீரர்கள் வீட்டை விட்டு வெளியே இருப்பதால், அலுவலக நோக்கங்களுக்காக கடவுச்சீட்டுக்களை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதற்காக அவர் கூறியுள்ளார்.

எனவே, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் படைப்பிரிவுகளிலிருந்து கடவுச்சீட்டுக்களை மீளப்பெறலாம் என்று வருண கமகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நடவடிக்கை நிர்வாக காரணங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் படைப்பிரிவுகளிலிருந்து பாஸ்போர்ட்டுகளை மீட்டெடுக்கலாம் என்று வருண கமகே தெளிவுபடுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...