இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்

Share
rtjy 208 scaled
Share

அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக சுகயீன விடுமுறையை பதிவு செய்ததன் காரணத்தினால் குறித்த கடமைகளை முன்னெடுக்க இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றையதினம் (22.11.2023) வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்து பணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த பணிக்கு இராணுவத்தினர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் பூர்வாங்க நடவடிக்கையாக நேற்று (21) பனாகொட இராணுவ முகாமின் உப பிரிவினர், நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் ஆலோசனையின் கீழ் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், அதன் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் பேரில், கடமைகளை உள்ளடக்கிய இடங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...