rtjy 208 scaled
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்

Share

அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக சுகயீன விடுமுறையை பதிவு செய்ததன் காரணத்தினால் குறித்த கடமைகளை முன்னெடுக்க இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றையதினம் (22.11.2023) வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்து பணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த பணிக்கு இராணுவத்தினர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் பூர்வாங்க நடவடிக்கையாக நேற்று (21) பனாகொட இராணுவ முகாமின் உப பிரிவினர், நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் ஆலோசனையின் கீழ் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், அதன் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் பேரில், கடமைகளை உள்ளடக்கிய இடங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...