யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதி, போதைக்கு அடிமையானதால் எடுத்த தவறான முடிவின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகிறது.
இவர் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்துக் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குறித்த யுவதி நேற்றைய தினம் (அக் 20) உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளைச் சாவகச்சேரி காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.