Long Time Theif Arrested Nelliyadi Jaffna 1 e1644144629244
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் வசமாக சிக்கினார்!!

Share

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வேதாரண்யேஸ்வரா வித்தியாலயம், யாக்கரு வித்தியாலயம் மற்றும் விக்கினேஸ்வரா வீதியில் உள்ள மாதா ஆலயம் மற்றும் கணவாய் பகுதியில் உள்ள வீடு ஆகியவற்றில் கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசந்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வெள்ளிக்கிழமை (04) கரணவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

அவரது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்களையும், விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொலைபேசி தங்க நகை என்பன மீட்க்கப்பட்டிருந்தன.

மேலும் அவரது உடைமையில் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்த குற்றத்தடுப்பு பிரிவினர், பிரதான சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...