image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

Share

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம், திங்கட்கிழமை (நவம்பர் 10) அன்று நூறாவது (100) நாளை எட்டியுள்ளது. இதனை நினைவுகூரும் விதமாக, அன்று இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கையில் அமைதியான முறையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைத் திட்டங்களுக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மக்களின் வாழ்விடங்கள், நாட்டின் வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததியினரிடம் கையளிக்கும் இந்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சிப் போராட்டம், நாளை (நவம்பர் 12) முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் அறிவித்துள்ளார்.

போராட்டத்தின் 100ஆவது நாளை நினைவுகூரும் இந்நாளில், மக்கள் சார்பில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட (தம்பபவனி, நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தித் திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் வேண்டும்.

அரசாங்கம் தமது மக்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...