image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

Share

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம், திங்கட்கிழமை (நவம்பர் 10) அன்று நூறாவது (100) நாளை எட்டியுள்ளது. இதனை நினைவுகூரும் விதமாக, அன்று இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கையில் அமைதியான முறையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைத் திட்டங்களுக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மக்களின் வாழ்விடங்கள், நாட்டின் வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததியினரிடம் கையளிக்கும் இந்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சிப் போராட்டம், நாளை (நவம்பர் 12) முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் அறிவித்துள்ளார்.

போராட்டத்தின் 100ஆவது நாளை நினைவுகூரும் இந்நாளில், மக்கள் சார்பில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட (தம்பபவனி, நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தித் திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் வேண்டும்.

அரசாங்கம் தமது மக்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...