images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

Share

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.

உயர்ஸ்தானிகருடன் அவரது பாரியாரும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து விகாரை தொடர்பான குறைபாடுகளைக் கேட்டறிந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விகாரை மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது என்றும், விகாரைக்குச் சொந்தமான காணிகளைச் சிலர் அபகரித்துள்ளதாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாத்து, அவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு வழிவகை செய்வதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்தப் பகுதியினரின் வாழ்வாதாரமும் சிறப்பாகும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்தத் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

விகாராதிபதியின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதியை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், மிகுதிப் பணம் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...