images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

Share

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.

உயர்ஸ்தானிகருடன் அவரது பாரியாரும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து விகாரை தொடர்பான குறைபாடுகளைக் கேட்டறிந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விகாரை மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது என்றும், விகாரைக்குச் சொந்தமான காணிகளைச் சிலர் அபகரித்துள்ளதாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாத்து, அவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு வழிவகை செய்வதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்தப் பகுதியினரின் வாழ்வாதாரமும் சிறப்பாகும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்தத் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

விகாராதிபதியின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதியை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், மிகுதிப் பணம் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...