images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

Share

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.

உயர்ஸ்தானிகருடன் அவரது பாரியாரும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து விகாரை தொடர்பான குறைபாடுகளைக் கேட்டறிந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விகாரை மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது என்றும், விகாரைக்குச் சொந்தமான காணிகளைச் சிலர் அபகரித்துள்ளதாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாத்து, அவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு வழிவகை செய்வதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்தப் பகுதியினரின் வாழ்வாதாரமும் சிறப்பாகும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்தத் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

விகாராதிபதியின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதியை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், மிகுதிப் பணம் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

25 68ff93f31cee3
செய்திகள்இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு: கைதானவர் குறித்த காணொளி பதிவு – காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்பு விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக...