20220226 164051 scaled
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் புதிய திட்டம்!!

Share

பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலையின் இலவச கல்வி அமைப்பு சம்பந்தமான கலந்துரையாடலும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் வைபவமும் நேற்றையதினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இ – கல்வி தொண்டு நிறுவன நிறுவுனர் முரளிதரன் (அவுஸ்ரேலியா) கருத்து வெளியிடுகையில்,

பெற்றோர்களுடைய பங்கு இல்லாமல் மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றத்தை காட்ட முடியாது. நாடு தழுவிய ரீதியில் வடக்கு கிழக்கு மலையகம் என அனைத்து பிரதேசங்களிலும் எமது திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் பண்டத்தரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்தில் முதலாவது இ-கல்வி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச மாணவர்களின் கல்வியில் பாரிய முன்னேற்றத்தை இது ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

எமது திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் இணைப்பதே நோக்கம். அது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கு கடந்த வருட பெறுபேறுகள் சான்றாக அமைகின்றன.

அடுத்தகட்டமாக பாடசாலை மாணவர்களின் வரவுகள் உறுதிப்படுத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

அடுத்த பொதுப்பரீட்சை பெறுபேறுகள் வலிகாமம் கல்வி வலயத்தை உயர்நிலைக்கு இட்டு செல்லும், இதற்கு வலயக்கல்வி பணிப்பாளர், அதிபர், ஆசிரியர் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றனர் என்றார்.

குறித்த நிகழ்வில் விக்டோரியா பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர், சங்கானை சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...