1 11
இலங்கைசெய்திகள்

சற்றுமுன்னர் அர்ச்சுனா எம்.பிக்கு யாழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

சற்றுமுன்னர் அர்ச்சுனா எம்.பிக்கு யாழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சற்று முன்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்காகவே இன்றைய தினம் (16) நீதிமன்றில் முன்னிலையானார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் உள்நுழைய முடியாது என்ற கட்டளையை நீதிமன்றம் வழங்கியுள்ளதுடன் குறித்த இருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் வழக்கின் அடுத்த விசாரணைகள் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை மேலும் தொடர்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி தனஞ்சயனும் வைத்தியசாலை நிர்வாகம் சார்பாக சட்டத்தரணி குருபரனும் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...