இலங்கைசெய்திகள்

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

Share
18 3
Share

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நிலையியற் கட்டளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (04) கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது.

தாம் இனவாத ரீதியாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிலையியற் கட்டளையின் ஊடாக கருத்துரைத்திருந்தார்.

இதனையடுத்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்றிலேயே இனவாதம் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் இனரீதியாகச் செயற்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் இனரீதியாகச் செயற்படவில்லை. கடந்த காலங்களிலிருந்த அரசியல் தலைவர்கள் மீதான எதிர்ப்பின் காரணமாகவே, தம்மைப் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்துக்குள் இனவாதம் ஏற்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து கருத்துரைத்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் விளைவாகவே, புதிய உறுப்பினர்களும் அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆமோதித்து கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிலையியற் கட்டளை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளைகள் 33 மற்றும் 32 ஆகியன வாய்மூல கேள்வியுடன் தொடர்புடையவையாகும்.

எனினும் அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைப்பது முழுமையாகத் தவறான விடயமாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...