7 36
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

Share

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் போராட்டம் வெடிக்கலாம் என சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டம் திடீரென முன்னெடுக்கப்பட்டது எனவும், இது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, ஏன் இவ்வாறு நடந்தது என்பது குறித்தும் யார் இதற்கு பொறுப்பு என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாகவும், சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என தாம் கருதவில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு போராட்டம் நடத்தப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரும், ராணுவத்தினரும் ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய போரில் இணைந்து கொள்ளும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...