9
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

Share

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதிக்கு நிதி மற்றும் பொருளாதார விடயங்களில் ஆலேசானை வழங்கி வழிநடத்துவதற்காக இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவவும் (Duminda Hulangamuwa), ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் அனில் பெர்ணாண்டோவும் (Anil Fernando) ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் கலந்தாலோசித்த பின்னர் ஜனாதிபதி தனக்கான பணியாளர்களை நியமிக்கலாம், அரசமைப்பில் இதற்கு இடமுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சரவை இந்த நியமனங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இரண்டு நியமனங்களும் செப்டம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவை கௌரவ பதவிகள் எனவும் எந்த சம்பளமோ அல்லது வேறு நன்மைகளோ வழங்கப்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...