tamilni 442 scaled
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பம் கோர அரசாங்கம் தீர்மானம்

Share

அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பம் கோர அரசாங்கம் தீர்மானம்

அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டமாக வழங்கப்படும் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் பிரதேசத்தில் திங்கட்கிழமை (25.12.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி்க்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு முறையாக விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இதற்காக மீண்டும் விண்ணப்பம் கோர தீர்மானித்திருக்கிறோம்.

அஸ்வெசும நிவாரண திட்டத்தின் முதலாம் கட்டத்தை நாங்களம் செயற்படுத்தி இருந்தோம். இதன்போது தகுதியானவர்களை தெரிவு செய்வதில் சில நடைமுறை பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம்கொடுத்திருந்தோம்.

அனுபவமுள்ள அரச அதிகாரிகளை எவ்வாறு இந்த வேலைத்திட்டத்துக்கு இணைத்துக்கொள்வது போன்ற விடயங்கள் அனைத்தையும் சிந்தித்தே ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு விண்ணப்பம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண திட்டத்துக்கு தகுதி இருந்தும் விண்ணப்பிக்க முடியாமல் போன சிலரிடம் மீண்டும் விண்ணப்பம் கோர உள்ளோம்.

அதன்படி, தற்போதுள்ள 20 இலட்சம் என்ற வரையறையை 24 இலட்சம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...