4 23 scaled
இலங்கைசெய்திகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை

Share

அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பிக்குகள் முன்னணியின் அழைப்பாளர் வகாமுல்லே உதித்த தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து அனுரவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு அநேக பிக்குகள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது வெளியில் நேரடியாக தோன்றாது கூட்டங்களில் பேசக்கூடிய வகையிலான வழிகள் குறித்து ஆராய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தங்களது அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் எந்த வகையிலான ஈவிரக்கமற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...