4 23 scaled
இலங்கைசெய்திகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை

Share

அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பிக்குகள் முன்னணியின் அழைப்பாளர் வகாமுல்லே உதித்த தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து அனுரவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு அநேக பிக்குகள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது வெளியில் நேரடியாக தோன்றாது கூட்டங்களில் பேசக்கூடிய வகையிலான வழிகள் குறித்து ஆராய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தங்களது அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் எந்த வகையிலான ஈவிரக்கமற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...