24 6632e38934210
இலங்கைசெய்திகள்

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

Share

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

“மே தினத்தை நடத்த பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு, செத்தம் வீதியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேடையில் வைத்து தேசிய மக்கள் சக்தி விற்பனை செய்ததாக கூறப்படும் டிக்கெட்டையும் அவர் காட்டியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் “தேசிய மக்கள் சக்தியானது மே தினச் செலவை அப்பாவித் தொழிலாளர் மீது சுமத்தியுள்ளது.

இந்த டிக்கெட் எனக்கு அலவ்வ சென்ட்ரல் ஆசிரியர் ஒருவரே கொடுத்தார். தற்பெருமை பேசும் அனுர திஸாநாயக்கவின் சக்தி இது.

எனது கையில் இருக்கும் இந்த டிக்கெட், மே தினத்தை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு கிராமத்தின் தொழிலாளர்களிடம் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.

மே தினத்தை நடத்த இப்படி பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே”? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...