10
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசியல் எதிர்காலம்: நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அநுரவின் அரசியல் எதிர்காலம்: நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் மேடையில் சொல்லப்படும் பொய்களை நிறுபிக்க முடியாத சந்தர்ப்பம் வரும்போது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவரின் ஆதரவாளர்களே சவால் விடுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

அடுத்த தசாப்தத்தில் அதை ஒரு தீர்க்கமான காரணியாக எமது கட்சி வலுவடையும்.

எமது கட்சியின் தலைவர் கட்சியை விட்டு வெளியேறியதால் உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜனாதிபதி தேர்தலின் போதும் கூட அவர் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவில்லை.

அடுத்த ஐந்து வருடங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anura Kumara Dissanayake) யார் சவால் விடுவார்கள் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவா? நாமல் ராஜபக்சவா? சஜித் பிரேமதாசவா? என கேட்கிறார்கள்.

இதற்கு நான் கூறும் பதில், சவால் விடுவது வேறு யாரும் அல்ல. அவரது குழுவினரே சவாலாக மாறுவார்கள். ஏனென்றால் தேர்தல் மேடையில் சொல்லப்படும் பொய்களை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இது நடைபெறும்.’’ என்றார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...