1 6
அரசியல்இலங்கைசெய்திகள்

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

Share

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி அதிக வாக்குகளை பெறுவார்.

இதன் மூலம் இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மகியங்கனையில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது முன்னாள் அரசியல் நண்பர், எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் தனது கடமைகளில் தவறிவிட்டார்.

எனவே பிரதான எதிர்க்கட்சி தலைவர் நிலைப்பாட்டை அவரால் தக்க வைக்கமுடியாது போகும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், தமது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. அத்துடன் கடந்த காலத்தில் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இருமுனைப் போட்டி மாத்திரமே இருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அனுர சஜித்தை வெற்றி கொண்டு எதிர்க்கட்சி தலைவராவார் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...