3 42
இலங்கைசெய்திகள்

சஜித் குப்பை வண்டிக்கு நிகரானவர்: விமர்சித்த அனுர

Share

சஜித் குப்பை வண்டிக்கு நிகரானவர்: விமர்சித்த அனுர

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நகரசபையின் குப்பை வண்டிக்கு நிகரானவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“சஜித் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் தாடி வளர்க்க இடமளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் உண்மையா என என்னிடம் பலர் கேட்கின்றார்கள்.

நானும் தாடி வளர்த்திருக்கின்றேன் என நான் கூறினேன். ஐந்து முறை தொழுகை செய்ய இடமளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. இவை எல்லாம் என்ன கதை, இது அரசியலா?

சஜித்தின் முகாம் அரசியல் ரீதியாக குழம்பிப் போயுள்ளது. தலைவர் முதல் கீழ் மட்ட உறுப்பினர்கள் வரையில் எவரிடமும் கொள்கையில்லை.

அவர்களிடம் இலக்கு இல்லை. திட்டமில்லை. செய்யும் வேலையில்லை. ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகளை சஜித் பேசி வருகின்றார்.

அதற்கு பொருத்தமான சிலர் அவருடன் இருக்கின்றார்கள். இதுவே இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு நேர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....