3 42
இலங்கைசெய்திகள்

சஜித் குப்பை வண்டிக்கு நிகரானவர்: விமர்சித்த அனுர

Share

சஜித் குப்பை வண்டிக்கு நிகரானவர்: விமர்சித்த அனுர

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நகரசபையின் குப்பை வண்டிக்கு நிகரானவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“சஜித் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் தாடி வளர்க்க இடமளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் உண்மையா என என்னிடம் பலர் கேட்கின்றார்கள்.

நானும் தாடி வளர்த்திருக்கின்றேன் என நான் கூறினேன். ஐந்து முறை தொழுகை செய்ய இடமளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. இவை எல்லாம் என்ன கதை, இது அரசியலா?

சஜித்தின் முகாம் அரசியல் ரீதியாக குழம்பிப் போயுள்ளது. தலைவர் முதல் கீழ் மட்ட உறுப்பினர்கள் வரையில் எவரிடமும் கொள்கையில்லை.

அவர்களிடம் இலக்கு இல்லை. திட்டமில்லை. செய்யும் வேலையில்லை. ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகளை சஜித் பேசி வருகின்றார்.

அதற்கு பொருத்தமான சிலர் அவருடன் இருக்கின்றார்கள். இதுவே இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு நேர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...