5
இலங்கைசெய்திகள்

பொதுத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் கையொப்பமிட்டார் அநுர

Share

பொதுத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் கையொப்பமிட்டார் அநுர.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்த செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் தொடர்பிலான ஆவணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) கையொப்பமிட்டுள்ளதாக பொதுத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பிலான இரண்டு சந்திப்புகள் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளன.

மேலும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு இடையே இந்த சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...