34 2
இலங்கைசெய்திகள்

வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை- அநுர அரசு

Share

தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது,மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போயிருந்த நிலையில் மீண்டும் கிடைப்பவருக்கே வீடுகளில் கூடுதலாக கவனிப்பு இருக்கும். ஏனெனில் அவர்கள் பட்ட கஷ்டம், வலி பெரும் வேதனைமிக்கதாக இருந்திருக்கும். வடக்கு என்பதும் இலங்கைக்குக் கிடைக்காமல் இருந்த பிள்ளைதான்.

தற்போது அந்தப் பிள்ளை நாட்டுக்குக் கிடைத்துள்ளது. போரால் வடக்கு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். எனவே, தேசிய நல்லிணக்கத்துக்காக மட்டும் அல்ல அபிவிருத்திக்காகவும் எம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வோம்.

இதனை நாம் வாக்குகளுக்காக செய்யவில்லை. நாம் சேவை செய்தால் வாக்கு என்பது தாமாகவே கிடைக்கும். எனவே, உண்மையாகவே சேவையாற்றுகின்றோம். வடக்கு மாகாணத்தில் மன்னாரில் எமக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.வவுனியாவிலும் வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கில் 150 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் அவ்வாறு இருக்கவில்லை. கிழக்கிலும் 216 உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...