21 4
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களை ஆதரித்த ஹக்கீம்! சபையில் அநுர தரப்பின் சரமாரியான பதிலடி

Share

ராஜபக்சர்களை ஆதரித்த ஹக்கீம்! சபையில் அநுர தரப்பின் சரமாரியான பதிலடி

ராஜபக்சர்களுடன் கூட்டிணைந்து ஆட்சி அமைத்துவிட்டு இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விமர்சிப்பது அநீதியான செயற்பாடு என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியை தாங்கிப்பிடித்தே இதுவரை காலமும் ஆசனத்தை தக்கவைத்துகொள்கின்கிறீர்கள் எனவும் சாடியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று, மியன்மார் அகதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

‘ஹர்ஷ டி சில்வா இவ்வாறான கருத்துக்களை முன்மொழிந்திருந்தால் பரவாயில்லை. அதேபோல நாங்கள் ஒருபோதும் ராஜபக்சர்களுடன் கூட்டணியும் அமைக்கவில்லை.

நீங்கள்தான் அனைத்து அரசாங்கங்களுடனும் இணைந்து மிகவும் மோசமான இனவாதத்தை விதைத்துள்ளீர்கள்.அனைத்து அரசாங்கங்களிலும் பங்களித்துள்ளீர்கள்.

என்றாவது முஸ்லிம் காங்கிரசில் முக்கியமான தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா? ஐக்கிய மக்கள் சக்திக்கே முட்டுக்கொடுத்து ஆசனத்தை தக்கவைத்துகொள்கின்கிறீர்கள்.

எமது கருத்துக்களை எதிர்க்க வேண்டாம். மேலும் நீங்கள் முஸ்லிம் மக்களின் தலைவர் என்பதால் உங்களுக்கு முழுமையான மதிப்பை வழங்க நாங்கள் முன்வருவோம்.

ஆனால் அதை தாண்டி நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனோ அல்லது மொட்டு தரப்புடனோ இணைந்தே ஆசனத்தை தக்கவைப்பீர்கள்.

அதேபோல அரசியலமைப்பு சபையில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு யாரும் வாய்ப்பை வழங்கவில்லை.

ஆனால் நாங்கள் வழங்கியுள்ளோம். நீங்கள் சஜித் தரப்புக்கே முட்டு கொடுத்தீர்கள். உங்களை நியமித்தார்களா. ஒருபோதும் இல்லை.

ஆகவே புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய வங்குரோத்து நிலைக்கு எம் மக்களை பலிகடா ஆக்கவேண்டாம்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...