7 33
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் உண்மை ஆட்சியை கண்டறிய ஒரு வருடமாவது வேண்டும் : முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Share

ஜனாதிபதியின் உண்மை ஆட்சியை கண்டறிய ஒரு வருடமாவது வேண்டும் : முன்னாள் இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், தமது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவேண்டுமானால், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அதற்கு முன்னர் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு எவரும் அவசரப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

 

பதவிக்கு வந்த வெறும் 24 நாட்களுக்குள் 60 பில்லியன் ரூபாய்களை இந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியவில்லை.

 

எனவே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடையக்கூடும் என எச்சரித்த அவர், நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு திறமையான குழுவொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.

 

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தாலும், அவசரப்பட்டு ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது என்று ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி, வரவிருக்கும் நெருக்கடி குறித்து நாட்டுக்கு மக்களுக்கு நினைவுப்படுத்துவதாகவும் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...