24 663eb53c653c5
அரசியல்இலங்கைசெய்திகள்

அனுரவின் ஆட்சி பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித

Share

அனுரவின் ஆட்சி பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித

அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne ) எச்சரித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், வருமானத்துக்கேற்ப வரி (விற்றுமுதல் அல்லது கொள்முதல் வரி) விதிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வௌ்ளிக்கிழமை (10) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அனுரகுமார திசாநாயக்கவின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அனுரகுமார திசாநாயக்கவினால் திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புரள்வு வரி விதிக்கும் முறையே இன்றும் நடைமுறையில் உள்ளது.

இந்த நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் விற்றுமுதலுக்கு வரி விதிக்கப்படுகின்றது. இது போன்று இல்லாத நாடு உலகில் இல்லை .

அனுரகுமார திசாநாயக்க வந்து தாம் நினைக்கும் வகையில் பொருளாதாரத்தை கையாண்டால் இந்த நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் தற்போது வழங்கி வரும் வரிச்சலுகைகளுக்கும் ஆபத்து ஏற்படும் இந்த நாட்டில் மட்டுமல்ல.

உலகத்தின் மொத்த விற்றுமுதல் மீதும் வரி விதிக்கப்படுகிறது. அது இல்லாமல் எங்கும் வரி வசூலிக்கும் நாடு இல்லை. அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணர்கள், புரள்வுக்கு வரி விதித்தால் நன்றாக இருக்கும், தற்போது அவ்வாறான நடைமுறை இல்லை.

எனவே நாம் ஆட்சிக்கு வந்தால் அதனைத் தொடங்குவோம் என்று கூறியிருப்பார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...