24 663eb53c653c5
அரசியல்இலங்கைசெய்திகள்

அனுரவின் ஆட்சி பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித

Share

அனுரவின் ஆட்சி பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித

அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne ) எச்சரித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், வருமானத்துக்கேற்ப வரி (விற்றுமுதல் அல்லது கொள்முதல் வரி) விதிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வௌ்ளிக்கிழமை (10) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அனுரகுமார திசாநாயக்கவின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அனுரகுமார திசாநாயக்கவினால் திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புரள்வு வரி விதிக்கும் முறையே இன்றும் நடைமுறையில் உள்ளது.

இந்த நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் விற்றுமுதலுக்கு வரி விதிக்கப்படுகின்றது. இது போன்று இல்லாத நாடு உலகில் இல்லை .

அனுரகுமார திசாநாயக்க வந்து தாம் நினைக்கும் வகையில் பொருளாதாரத்தை கையாண்டால் இந்த நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் தற்போது வழங்கி வரும் வரிச்சலுகைகளுக்கும் ஆபத்து ஏற்படும் இந்த நாட்டில் மட்டுமல்ல.

உலகத்தின் மொத்த விற்றுமுதல் மீதும் வரி விதிக்கப்படுகிறது. அது இல்லாமல் எங்கும் வரி வசூலிக்கும் நாடு இல்லை. அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணர்கள், புரள்வுக்கு வரி விதித்தால் நன்றாக இருக்கும், தற்போது அவ்வாறான நடைமுறை இல்லை.

எனவே நாம் ஆட்சிக்கு வந்தால் அதனைத் தொடங்குவோம் என்று கூறியிருப்பார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...