7 20
இலங்கைசெய்திகள்

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

Share

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்ற தனது கேள்விக்கு மூன்று நாட்களாகியும் அநுர பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் டொலர் ஒன்றின் பெறுமதி 500 ரூபாவை தொடும். கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையை விட மோசமான நிலை உருவாகும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சிரத்தையுடன் மீள கட்டியமைக்கப்பட்டது. அதனை மீண்டும் நிலைகுலைய அனுமதிக்க முடியாது.

அவர் திருடன் இவர் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...