இலங்கைசெய்திகள்

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

Share
7 20
Share

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்ற தனது கேள்விக்கு மூன்று நாட்களாகியும் அநுர பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் டொலர் ஒன்றின் பெறுமதி 500 ரூபாவை தொடும். கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையை விட மோசமான நிலை உருவாகும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சிரத்தையுடன் மீள கட்டியமைக்கப்பட்டது. அதனை மீண்டும் நிலைகுலைய அனுமதிக்க முடியாது.

அவர் திருடன் இவர் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...