7 20
இலங்கைசெய்திகள்

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

Share

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்ற தனது கேள்விக்கு மூன்று நாட்களாகியும் அநுர பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் டொலர் ஒன்றின் பெறுமதி 500 ரூபாவை தொடும். கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையை விட மோசமான நிலை உருவாகும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சிரத்தையுடன் மீள கட்டியமைக்கப்பட்டது. அதனை மீண்டும் நிலைகுலைய அனுமதிக்க முடியாது.

அவர் திருடன் இவர் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...