tamilni 250 scaled
இலங்கைசெய்திகள்

இந்த வருடம் ஆட்சி கைப்பற்றப்படும் : அனுரகுமார சீற்றம்

Share

ஏதாவது ஓர் வழியில் இந்த ஆண்டில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள தயார்.

மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான தீர்க்கமான ஓர் போர் நடைபெறுகின்றது. மக்கள் இந்தப் போரிலிருந்து பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக இந்த போரை வெற்றிகொள்வோம்.

ஹம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார்.

“துறைமுகம் அமைத்தார் கப்பல் இல்லை, மைதானம் அமைத்தார் போட்டிகள் இல்லை, சிறைச்சாலை அமைத்தார் அது நிரம்பியுள்ளது. இந்தக் கள்வர் கூட்டம் பயன்படுத்தும் வாகனங்கள் நாட்டுக்கு தாக்கு பிடிக்கக் கூடியதல்ல.

இவர்களின் வாகனங்கள் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு இரண்டு மூன்று கிலோமீற்றர் மட்டுமே பயணிக்கக்கூடியவை. ரணிலின் வாகனம் 3000 லட்சம் ரூபா பெறுமதியானது. இந்த கள்வர் கூட்டத்தை விரட்டியடிப்போம். நேரடியாக கூறினால் நாம் ஆட்சியை கைப்பற்றுவோம்” என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...